குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்த கொண்ட பெண்

13 April 2021

மதுரை ஜீவா நகர் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் தெருவில் கடந்த 5 மாதமாக வசித்து வந்த விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) , உமாதேவி(20) என்கிற இளம்வயது தம்பதியினர் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், பின்னர் நள்ளிரவில் உமாதேவி தூக்குமாட்டி இருந்துள்ளார் எனவும், அதனை கண்ட கணவன் பாலகிருஷ்ணன் காதல் மனைவி மறைந்த சோகத்தில் உளியால் தனது கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தகவல்அறிந்து வந்த ஜெய்ஹிந்துபுறம் போலீசார் உமா தேவியின் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூராய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்; இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், உமாதேவிக்கு 16 வயதின் போது திருமண செய்து கொண்டதாகவும், இதனால் பாலகிருஷ்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்பின் 18 நிரம்பிய பின்னர் மீண்டும் இருவீட்டார்களையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டு மதுரைக்கு வந்து பாலகிருஷ்ணன் கார்பெண்டர் ஆகவும், உமாதேவி பேன்சி ஸ்டோரில் பணியாற்றி வந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில தினங்களாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.