வந்தவாசி பெருமாள் கோவிலில் யுகாதி முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

13 April 2021

இன்று யுகாதி தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் பாகவத கோஷ்டியினர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடல்களை பஜனை மூலம் பாடினார்கள். சுவாமிக்கு பூமாலைகள் சாற்றப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.