ரயில் மறியல்.. திருச்சியில் சிபிஎம்-போலீஸ் தள்ளுமுள்ளு…
30 November 2020
ரயில் மறியல்.. திருச்சியில் சிபிஎம்-போலீஸ் தள்ளுமுள்ளு…
மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி ரயில்வே ஜங்சன் நுழைவு வாயிலில் இருந்து பேரணியாக வந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். ஜங்ஷன் ஆர்ச் முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் அவர்கள் ஜங்ஷனுக்கு செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டகார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தரையில் அமர்ந்து போராட்டத்தில் கம்யூ.வினர் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனால் ஜங்சன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.