ஊர்காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

30 November 2020

தஞ்சாவூர் ஊர்காவல் படையில் காலியாக இருந்த 50 பணியிடங்களுக்கான உடல் தேர்வு, எழுத்து தேர்வு கடந்த 28, 29, தேதிகளில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை பகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்வுகளில் 2800 பேர் பங்கேற்றனர்.

இதில் 43 ஆண்களும், 7 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் தேஷ்முக்சேகர் தலைமையில் நடைபெற்றது தேர்வு பெற்றவர்களை வாழ்த்தியும், பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியும், தேர்வு பெற்றவர் களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

ஊர்காவல் படை சரக தலைவர் செந்தில்குமார், ஊர்காவல் படை தளபதி சுரேஷ், உதவி மண்டல தளபதி மங்களேஸ்வரி, நகர காவல் கண்காணிப்பாளர், பாரதிதாசன், ஆயுதப்படை டி.எஸ்.பி. சம் ஸ்ரீபாலன் உள்ளிட்டோர் பணி ஆணை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.