மக்கள் பயன் பெரும் வகையில் தமிழக அரசு சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

29 November 2020

அனகாபுத்தூர் பகுதி வாழ் மக்கள் பயன் பெரும் வகையில் தமிழக அரசு சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதி மக்கள் பயன் பெரும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அனகாபுத்தூர் நகராட்சிக்கென்று ஒதுக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை இன்று முதல் அனகாபுத்தூர் பிரதான சாலையில் இருந்து துவங்கப்பட்டது.

இதில் அதிமுகவின் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டார் இதில் முன்னாள் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் பா.தன்சிங், முன்னாள் அனகை நகர மன்ற தலைவர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணை செயலாளர் டாக்டர் முரளிதரன் மற்றும் நகர செயலாளர் துரை பாபு உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ச.ராஜ்கமல்