திருப்பத்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆய்வு

17 June 2020

திருப்பத்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மோட்டூர் ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அந்தப் பகுதி முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மற்றும் திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் தனிமைப்படுத்தப் பட்டவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதேபோன்று காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு, காவல் ஆய்வாளர்கள் பழனி, உலகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.