நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது

15 November 2021

நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இலங்கை கடற்படையால் அக்டோபர் 13ஆம் தேதி நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடைய நீட்டிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து மூன்றாவது முறையாக இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 23 பேர் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்த நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்திருக்கிறது.