சிறுமி பாலியல் துன்புறுத்தல்- சாகும் வரை ஆயுள் தண்டனை

15 November 2021

*சிறுமி பாலியல் துன்புறுத்தல்- சாகும் வரை ஆயுள் தண்டனை*

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி  வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை திருச்சி மாவட்டம் சமயபுரத்தை சேர்ந்த மாதவன் என்ற 27 வயது இளைஞர், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலிசார் வழக்கு பதிவு செய்து  போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 மேலும் இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நான்கு மாதங்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் ஜூன் 22ஆம் தேதி மாதவன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  இதில் குற்றவாளி மாதவனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு தரப்பில் 4 லட்சம் நிதி நிவாரணம் வழங்கும் தீர்ப்பு அளிக்கப்பட்டது

மேலும் குற்றம் நடந்து நான்கு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது