முன்களப்பணியாளர்களான தூய்மைப்பணியாளர்கள் 200 பேருக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..

18 June 2021



கொரானா வைரஸ் தொற்று காரணமாக முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகின்றனர். குறிப்பாக தூய்மைப்பணியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலு ம் நோய்தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு, மளிகைப்பொருட்கள்,
காய்கறிகள் உள்ளிட்டவற்றை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். மதுரை தவிட்டு சந்தை பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இந்நிகழ்வில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. இலவசப்பொருட்களை பெற்றுக்கொண்ட தூய்மைப்பணியாளர்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.