பையூர் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் முன்னோட்டம்.

19 January 2022

   அனக்காவூர் ஒன்றியம் பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் SCERT & மாநில ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலமாக தொடக்கக்கல்வித் துறையின் ஒன்று, இரண்டு , மூன்றாம் வகுப்பு மாணவர்களின் மொழி & கணித கற்றல் திறன் மேம்பாட்டு வளர்ச்சியினை கருத்தில் கொண்டு எண்ணும் எழுத்தும் என்ற கற்றல் கற்பித்தல் முறைக்கான முன்னோட்ட வகுப்பினை தமிழக அரசின் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் படி இல்லம் தேடி கல்வி மையங்களில் தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி இரா.தேன்மொழி தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர் திரு . தங்கவேல் இதற்கான புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர் உடன் பட்டதாரிஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.