மத்திய அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...

19 January 2022

[07:12, 1/19/2022] graphicvenkat: மத்திய அரசை
கண்டித்து கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.... 

ஜனவரி 26-ல் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார வாகனத்தை 
அணிவகுப்பிலிருந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அப்பாவு, விவசாய சங்க நிர்வாகி இரா.கஜேந்திரன், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியரசு தின அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழக வீரர், வீராங்கனைகளின் தியாகங்களை போற்றும் அலங்கார வாகனத்தை புறக்கணித்து, தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்தும்,  வஞ்சித்து வரும் போக்கை கைவிட வேண்டும் என்று  ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம்.