பையூர் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் முன்னோட்டம்.

20 January 2022

இன்று(20-01-2022) அனக்காவூர் ஒன்றியம் பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி மையம் மூலமாக நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முன்னோட்ட நிகழ்வினை திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.இராமலிங்கம் அவர்கள் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி இரா.தேன்மொழி,பட்டதாரி ஆசிரியர் திரு இரா.அருள்ஜோதி மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.