இலட்சியத்துடன் வாழ பழகுங்கள்: இன்ஸ்பெக்டர் சோனியா பேச்சு

12 October 2021


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் அவர்களின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு *மாணவர்களுக்கான சிந்தனை அரங்கம் மற்றும் 101 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு* நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை க. ஜான்சிராணி தலைமை வகித்தார். தெள்ளாறு கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் புலவர் ந. பானு மற்றும் சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிர்வாகி ம. சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
    *சிறப்பு அழைப்பாளராக,* தெள்ளார் காவல் ஆய்வாளர் இர. சோனியா பங்கேற்று,  *நீங்களும் ஆகலாம் கலாம்* என்ற தலைப்பில் மாணவிகளுக்கு சிந்தனை உரையை வழங்கினார். மேலும் தெள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.ஜி. ஆனந்தன்  மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டி பேசினார். இந்த நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் மொ. ஷாஜகான், கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ்  ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். *பேச்சு, ஓவியம், கட்டுரை* உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. *பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.* பள்ளியின் இசையாசிரியர் டி.பி.வெங்கடேசன் டாக்டர் அப்துல் கலாம்  பாடல்களை பாடினார். இறுதியாக பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஏ. சக்திவேல் நன்றி கூறினார்.