பேருந்து நிலையம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்

12 October 2021

மேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே மல்லாக்கோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கே ஆர் வி எனும் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.

இங்கு கடந்த 1.10.2021ஆம் தேதி வாடிப்பட்டி அருகே விக்ரமங்கலத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் மற்றும் வைரமணி உள்ளிட்ட மூன்று பெண்கள் பொருட்கள் வாங்குவது போல் வந்து, கடையில் உள்ள நெய் பாட்டில், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர், இதனைத் தொடர்ந்து கடையின் மேலாளர் பொருட்களை கணக்கெடுத்த பொழுது பொருட்கள் குறைவதைக் கண்டு அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார், அதில் மூன்று பெண்கள் பொருட்கள் வாங்குவது போல் வந்து,  சேலையினுள் பொருட்களை திருடி செல்வது பதிவாகியிருந்தது. 

இந்நிலையில் அதே நபர்கள் மீண்டும் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவது போல் வந்து திருட முயற்சித்த போது கடையின் ஊழியர்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் கடையில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தன. இதனைதொடர்ந்து அவ்வழியாக வந்த போது காவல்துறையினர் உதவியுடன் அவர்களை மேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இது தொடர்பாக புகார் செய்த நிலையில் மேலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்த்துடன் அவர்களுடன் வந்த மற்றொரு பெண்ணை  தேடி வருகின்றனர்