பொள்ளாச்சி வாலிபர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

25 May 2022

பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசெல்வன் என்ற வாலிபர் நதிகளை இணைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் 26 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி அவர், இன்று மாலையில் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் முன் இருந்து சைக்கிளில் புறப்பட்டார். அவரை தாயார் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர்.நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும் முத்துசெல்வன், தனது சைக்கிளில் கேமரா, சைக்கிளுக்கு தேவையான சிறிய உதிரிபாகங்கள், ஸ்பேனர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்.

G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி