ஆழியார் அணை அருகே காட்டு யானை கூட்டம்

27 May 2022

பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் ஆழியாறு கவி அருவிக்கு செல்லும் வழியில் யானைகள் கூட்டம் தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வந்தது. கோடைகாலம் என்பதால் யானைகள் மற்றும் வன விலங்குகள் தண்ணீர் தேடி வருவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக யானை கூட்டம் ஒன்று வனப்பகுதியை விட்டு ஆழியாறு அணை ஒட்டிய பகுதிகளில் முகாமிட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் வால்பாறை செல்லும் வழியில் இந்த யானைக் கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வன பகுதி என்பதாலும் யானைகள் முகாமிட்டு இருப்பதாலும் சுற்றுலாப் பயணிகள் அந்தப் பகுதியில் நின்று செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


G.கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி