ஒன்றிய அமைச்சரை உளவு பார்த்த பெகாசஸ்!!?- தலைவர்கள் அதிர்ச்சி!

19 July 2021


பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், தற்போதைய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஆகியோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக புதிய தகவல்கள் 

வெளியாகியுள்ளது. யாரையும் ஒன்றிய அரசு உளவு பார்க்கவில்லை என நாடாளுமன்றத்தில் இன்று ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறிய நிலையில், அவரின் செல்போனையே 2017ல் உளவு பார்த்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பத்திரிகையாளர், முன்னாள் தேர்தல் ஆணையர் ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.