புதிய வைரஸ் விரைவில் வருகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

22 July 2021


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி வரும் வைரஸால் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் மனிதர்களை ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் செல்லப்பிராணிகள் உள்பட விலங்குகளை பார்வோ வைரஸ் என்ற வைரஸ் தாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
இந்த வைரஸ் குறிப்பாக நாய்களை அதிகம் தாக்கும் என்றும் மழைக்காலங்களில் இந்த வைரஸ் நாய்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பார்வோ வைரஸ் தடுப்பூசிகள் செல்லப்பிராணிகள் அனைத்துக்கும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் இந்த வைரஸ் நோய்கள் உள்பட விலங்குகளுக்கு அதிகம் பரவும் என்பதால் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.