பம்மலில் மக்கள் நீதி மைய்யம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி ..

12 June 2021


செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் கொரோனா ஊரடங்காள் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மக்கள் நீதி மையத்தின் தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் உதய சந்திரன் தலைமையில் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டத.இதில் மக்கள் நீதி மைய்யத்தின் நிர்வாகியும் பிரபல சமூக ஆர்வலருமான செந்தில் குமார் அவர்கள் கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான முத்து, மகேஷ்வரன்,கார்த்தி,தினேஷ்,தாமோதரன், கமல்சேகர்,கிருஷ்ணகுமார், மோகன் குமார், ஸ்டிபன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி வரும் மக்கள் நீதி மைய்யத்தின் கட்சியினரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.