மனித நேயத்துடன் செயல்பட்ட வடுவூர் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

12 June 2021


கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளியில் வரமுடியாமல் தவித்த எடமேலையூர் வடக்கு மேலத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மனைவி 85 வயதான  பிச்சையம்மாள் பாட்டியை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன்  உத்தரவின்பேரில் 
வடுவூர் காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி
என்பவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை
முடித்து அழைத்துவந்து வீட்டில் இறக்கிவிட்டு
உணவும் வழங்கியுள்ளார். 

மனிதநேயத்துடன் செயல்பட்ட
வடுவூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

கி.இரவி
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.