ஒன்றரை வயது பெண்குழந்தையின் உயிரை காப்பாற்றிய நன்னிலம் நெடுஞ்சாலை ரோந்து காவலர்களுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

12 June 2021

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  காவல் சரகம் நன்னிலம் நெடுஞ்சாலைரோந்து(2)
காவலர்கள் சன்னாநல்லூர் ரயில்வே கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக 
இருச்சக்கர வாகனத்தில் வந்த கீழ சன்னாநல்லூரை சேர்ந்த தம்பதிகள் முத்துக்குமாரசாமி மெல்மா 
ஆகியோரின் பெண்குழந்தை
சுகன்யா(ஒன்றரை வயது)
திடீரென உடல்நிலை சரியில்லாமல் நடுவழியில் வலிப்பு ஏற்பட்டுள்ளது. 

பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு பரிதவித்து நின்றநிலையில்
இதனை கண்ட நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் உடனடியாக
அந்த குழந்தையை
ரோந்து காவல் வாகனத்தில் ஏற்றி நன்னிலம் தனியார் மருத்துவமனைக்கு
விரைந்து அழைத்துச் சென்று குழந்தையை சிகிச்சைக்கு சேர்த்து மனிதநேயத்துடன் செயல்பட்டுள்ளனர். 

காவலர்களின் இச்செயலால் உயிருக்கு போராடிய அக்குழந்தை தற்போது நலமாக உள்ளது. இந்த காவல்பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்ட  செல்வராஜ்
ராஜேந்திரன்,புகழேந்திதிருநாவுக்கரசு ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்  பாராட்டினார். 

கி. இரவி.
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.