வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் S.S.சிவசங்கர்

17 November 2021

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த  அமைச்சர் S.S.சிவசங்கர்

     *பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சட்டபேரவை தேர்தலில் அரியலூர் தி.மு.க மாவட்ட செயலாளர் S.S.சிவவசங்கர் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்று பணிகளை மேற்கொண்டு வருகிறார், இந்நிலையில் இன்று 17.11.2021 காலை 8 மணி முதல் பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல், கீழப்புலியூர், கீழப்புலியூர் சிலோன் காலனி உள்ளிட்ட பகுதிகளில்  நன்றி அறிவிப்பு தெரிவித்து பயணம் மேற்கொண்டார், இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க மாவட்டகழக செயலாளர்  குன்னம் சி. இராஜேந்திரன்,வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.*