ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள்,பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல்

17 November 2021

அமெரிக்கா,நெதா்லாந்து நாடுகளிலிருந்து சென்னை,ஹைதராபாத்,விஜயவாடா நகரங்களுக்கு சரக்கு விமானத்தில் பரிசு பொருட்கள் என்ற பெயரில் வந்த பாா்சல்களில்,ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள்,கஞ்சா கலந்த உயா்ரக போதைப்பொருள்,பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து விசாரணை.

நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னையை சோ்ந்த ஒரு முகவரிக்கு ஒரு பாா்சல் வந்தது.அதில் கிப்ட்  ஆா்டிகல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.சுங்கத்துறையினா் சந்தேகத்தில் பாா்சலை பிரித்து பாா்த்து சோதனையிட்டனா். சேர்ந்த ஒருவருக்கு தபால் பார்சல் வந்தது.உயா்ரக போதை மாத்திரைகள் 26  இருந்ததை கண்டுப்பிடித்து பரிமுதல் செய்தனா்.சென்னை முகவரி போலியானது என்று தெரியவந்தது.

அமெரிக்காவிலிருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை  சேர்ந்த ஒருவருக்கு கொரியா் பார்சல் வந்தது.அதிலும் பிறந்த நாள் பரிசு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பரிசோதனை செய்ததில், 24 கிராம் பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா மற்றும் 64 கிராம் கஞ்சா கலந்த ஒரு வகையான போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதே போல, அமெரிக்காவிலிருந்து தெலுங்கானா மாநிலம்  ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த பார்சலில் 105 கிராம் உயா்ரக கஞ்சா இருந்தது. மூன்று பார்சல்களிலிருந்து, 129 கிராம் கஞ்சா மற்றும் 78 கிராம் கஞ்சா கலந்த போதைப் பொருள் மற்றும் போதை  மாத்திரைகளை  பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த போதை மாத்திரைகள்,பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா,கஞ்சா கலந்த ஒருவகை போதைப்பொருட்களின் இந்திய மதிப்பு ரூ.1.6 லட்சம்  என்று கூறப்படுகிறது.ஆனால் இந்த போதைப்பொருட்களின் சா்வதேச மதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் மேல் என்று தெரிகிறது.