மதுரையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு பல்வேறு தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் மருத்துவப்பணியாளர்களை முற்றுகையிட்டு போராட்டம் - வாக்குவாதம்.

14 June 2021




மதுரை மாவட்டத்தில் இன்று 38இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. மதுரை ஷெனாய்நகர் இளங்கோ பள்ளியில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையத்தில் செலுத்த காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் கூடினர். காலை 10 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குறைந்த அளவிலயே தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்திருந்த நிலையில் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனையடுத்து தங்கள் பெயரை முதலில் பதிய வேண்டுமென மருத்துவப்பணியாளர்களை ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாததால் அஙகு கொரோனா பரவும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு கூட்டத்தை கலைய செய்தனர்.