சென்னை பம்மல் பகுதியில் அன்பறம் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசர குடிநீர் வழங்கப்பட்டது

12 May 2021



செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்பறம் அறக்கட்டளை சார்பில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு சுமார் ஆயிரம் நபர்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்றும் கொரானா முழு ஊரடங்கு காலத்தில் பகுதிவாழ் மக்களுக்கும் மதிய உணவு வழங்குதல் தெருக்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற சேவைகள் அறக்கட்டளையின் சார்பாக நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.இதில் அறக்கட்டளையின் நிறுவனர் சமூக சேவகர் டாக்டர்.இரா.கந்தவேலு திமுக 14 வது வார்டு வட்ட செயலாளர் சாலா,அறக்கட்டளையின் செயலாளர் கமலநாதன்,பொருளாளர் பொன்னுசாமி ,துணைச் செயலாளர்கள் ராஜேஷ், சீதாலட்சுமி,செண்பகவல்லி, தில்லை நாகராஜ், சிபி விஷ்ணன் கலந்து கொண்டனர்.