செங்கல்பட்டு : குரோம்பேட்டை அருகே சிலிண்டர் வெடித்து வீடுகளில் தீ பற்றியதால் பரபரப்பு

11 May 2021


குரோம்பேட்டை நேதாஜி நகர் 2 வது தெருவில் திடீர் தீ விபத்து, குடிசை வீடு எரிந்து சாம்பலானது, எரிந்த வீட்டில் 2 கேஸ் சிலண்டர் வெடித்ததால் தீயனைப்பு வீரர் மற்றும் வேடிக்கை பார்க்க சென்றவருக்கு பலத்த காயம், இது குறித்து சிட்லப்பாக்கம் காவல்துறை விசாரனை

சென்னைகுரோம்பேட்டை அடுத்த நேதாஜி நகர் 2 வது தெருவில் குடிசை வீட்டில் வசிப்பவர் சரவணன் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இன்று இரவு சுமார் 8 மணி அளவில் தீரென குடிசையில் தீ பற்றியது அனைப்பதற்குள் மள மளவென தீ குடிசை முழுவது எரிந்தது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் இரண்டு தீயனைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணை வீரர்கள் தீயை அனைக்க முற்பட்டபோது வீட்டினுள் இருந்த சிலிண்டர் வெப்பம் தாங்காமல் வெடிக்க தொடங்கியது இதில் தீயணைப்பு வீரர் ரவி என்பவருக்கு காலில் லேசான காயமும், வேடிக்கை பார்க்க சென்ற வெங்கடேசன் என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர். சுமார் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தால் உயிர்சேதம் ஏது ஏற்படவில்லை. குடிடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என சிட்லப்பாக்கம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.