சீனாவுடனான பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் இந்தியா விரும்புகிறது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

25 October 2020

சீனாவுடனான பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். நவராத்திரி பண்டிகையின் 9-ஆம் நாளான  இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாகனங்களையும், தொழில் கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். .  அந்த வகையில் பாதுகாப்புத்துறை மந்திரி  ராஜ்நாத்சிங் போர் தளவாடங்களுக்கு இன்று  பூஜை செய்தார். டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை  செலுத்திய பின், தளவாடங்களுக்கு ராஜ்நாத்சிங் ஆயுத பூஜை செய்தார்.  அதன்பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்திய-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர வேண்டும், அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதேசமயம் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட யாரையும் எடுக்க நமது ராணுவம் அனுமதிக்காது’ என்றார்.