பெங்களூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு- எடியூரப்பா அறிவிப்பு

24 October 2020

கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பெங்களூரு நகரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு நகரில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறிய எடியூரப்பா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.

வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார்.