இடி மின்னலுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை. சாலையில் வெள்ளம் பெருக்கு

22 September 2021

*மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. சாலையில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஒட்டிய மழை நீர்....*

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது,


இந்நிலையில், இன்று பகல் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் இடி மின்னலுடன் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான  கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, சென்னகரம்பட்டி, அழகர்கோயில், கிடாரிப்பட்டி, சிட்டம்பட்டி, நரசிங்கம்பட்டி, திருவாதவூர், கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலூர், கீழவளவு, நாவினிப்பட்டி,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

 இதன் காரணமாக வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதுடன், இந்த கனமழையால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி பெருக்கெடுத்தது ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடந்துச் செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர் ...