ஹைதி நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு

16 August 2021


ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது.


வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி. இங்கு நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவானது. ஹைதி தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மக்கள் அனைவரும் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 304 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1800-க்கும் அதிகமானோர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலை யில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்திய தாகவும் தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஹைதியின் லெஸ் கேயஸ் பகுதியில் புதிதாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித் துள்ளது. மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.