உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் விஷம் குடித்து குடும்பத்துடன் 5 பேர் தற்கொலையால் சோகம்!

11 May 2021

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்கே தெருவில் வசித்து வருபவர் சரவணன்.35
இவர் நகைக்கடை தெருவில் நகைபட்டறை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கொரோனா முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி விஜி(24), மகள் அபி (5), மகாலட்சுமி (10), மகன் அமுதன்(6) ஆகிய ஐந்து பேரும் விஷம் குடித்து தற்கொலை. உடலை கைப்பற்றி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது