பள்ளியின் எதிரில் சாலையில் பள்ளம்: மழைநீர் தேங்குவதால் டெங்கு அபாயம்

23 September 2021

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் அமைந்துள்ள ஆர்.சி.எம் உயர்நிலைப் பள்ளியின் எதிரில் சாலையோர பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் உருவாக வாய்ப்புள்ளது.  மேலும் சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலரும் எதிர்பார்க்கின்றனர்.