திருவாரூர் அருகே 2-பேருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது 4 பேருக்கு போலீஸ் வலை

23 September 2021



திருவாரூர்,செப்-24
திருவாரூர் அருகே 2-பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்து  தலைமறைவுன 4 பேர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவாரூர் அருகே நடப்பூரை சேர்ந்தவர் குமரவேல் (வயது 34). இவரும், இவருடைய நண்பர் கனிவண்ணன் என்பவரும் தனித்தனியாக தஞ்சையை அடுத்த வல்லம் நோக்கி லாரிகளை ஓட்டி சென்று கொண்டிருந்தனர். கொரடாச்சேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மையப்பனில் இருந்து திருக்கண்ணமங்கை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, வடகரையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் குமரவேல் ஓட்டி சென்ற லாரியை வழி மறித்தார். இதனால் லாரியை நிறுத்திய குமரவேல், ஏன் லாரியை நிறுத்துகிறாய்? என கேட்டுள்ளார்..

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன் அருகில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து வீசி லாரியின் ஒரு பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது குமரவேல் நண்பர் ஓட்டி வந்த லாரியும் அங்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து குமரவேல், தப்பி ஓடிய ஹரிஹரனை பிடிக்க அருகில் இருந்தவர்களின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சிறிது தூரம் விரட்டிச்  சென்றுள்ளார். 

ஆனால் ஹரிஹரனை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர்கள் லாரிகள் நின்ற இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைததுள்ளனர். பின்னர் டீசல் டேங்கையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கு நின்றவர்களை திருக்கண்ணமங்கையை சேர்ந்த சிலம்பரசன் (29), குருநாதன் (32) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். 

இதில் காயமடைந்த சிலம்பரசன் மற்றும் குருநாதன் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் குமரவேல் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர. காவல்உதவி ஆய்வாளர்  ராஜாராமன் மற்றும் போலீசார்  வடகரையை சேர்ந்த ஹரிஹரன், எண்கணைச்  சேர்ந்த அருண் பாண்டியன், பிரகாஷ், கவுதம், வேலவன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஹரிஹரன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக தலைமறைவான 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

 
*நிருபர் மீனா திருவாரூர்*