சாக்கடை கட்டும் பணியை தொடங்கிவைத்தார் எம்எல்ஏ இரா.அருள்.

23 September 2021

சேலம்.
S.K.சுரேஷ் பாபு.

23வது கோட்டம் முல்லை நகரில் மக்களின் நீண்ட நாள் பிரச்சினையான சாக்கடை கட்டும் பணியை தொடங்கிவைத்தார்   எம்எல்ஏ இரா.அருள்.


11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது சேலம் மாவட்டம். இதில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பாமகவை சேர்ந்த இருப்பவர் இரா. அருள். இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அவற்றிற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகிறார். இது மேற்கு தொகுதி மக்களிடையே மிகச்சிறந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் இருபத்தி மூன்றாவது கோட்டத்துக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சனையான சாக்கடை பிரச்சினை இருந்து வருகிறது. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 250 மீட்டர் தூரத்திற்கான சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தொடங்கி வைத்தார். கோரிக்கை வைத்து குறுகிய நாட்களிலேயே சாக்கடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அவர்களுக்கு பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.