வசந்த் அன் கே-வின் 99 ஆவது கிளையை சேலத்தில் திரைப்பட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

23 September 2021

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.


வசந்த் அன் கே-வின் 99 ஆவது கிளையை சேலத்தில் திரைப்பட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் திறந்து வைத்தார்.


பாஜக மக்களுக்கான ஆட்சி இல்லை; வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என விஜய்வசந்த் எம்பி தெரிவித்துள்ளார். 


சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள வசந்த் அன் கோ - வின் 99 ஆவது கிளையை மறைந்த எம்.பி வசந்தகுமாரின் துணைவியார் தமிழ்செல்வி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து விஜய் வசந்த் எம்பி மற்றும் அவரது சகோதரர் வினோத்குமார், தங்கமலர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். பின்னர் முதல் விற்பனையை விஜய் வசந்த் துவக்கி வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர், கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தநாரி மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். 


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கன்னியாகுமரி எம்பி, நீட் தேர்வு வேண்டாம் என்பதை அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தி வருகிறோம்; தமிழக முதல்வர் நிலையாக நின்று, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. நீட் தேர்வு காரணமாக  தன்னம்பிக்கை இழந்து மருத்துவம் படிக்க வேண்டாம் என்ற நிலைக்கு மாணவர்கள் மாறி விடுகின்றனர் என்றார் மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து அனைவரும் ஒரே அணியில் திரண்டு வருவதாகவும், பாஜக மக்களுக்கான ஆட்சி இல்லை, வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.