கவுதம் கம்பீருக்கு கொரோனா

25 January 2022

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தனது விளையாட்டு போட்டிக்கான ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார்.

தற்போது டெல்லி மக்களவை உறுப்பினராக உள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கவுதம் கம்பீர், லேசான அறிகுறிகளுடன் வீட்டுத் தனிமையில் உள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.