கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

11 January 2022

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தென்கரை தண்டுபாளையம் பள்ளி செயலாளரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேனி மாவட்ட செயலாளருமான நூர் முகமது தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொரோனா ,ஒமிக் ரான்நோய் பரவல் குறித்தும் அவற்றை கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகளை எடுத்துரைத்தும், அரசு காட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்திட வேண்டுமாய் கேட்டுக் கொண்டு முக கவசம் அணிவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு முக கவசங்கள் , கபசுர குடிநீர் வழங்கி கொரோனா தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். மேலும் பேருந்துகளில் ஏறிமுக கவசம் அணியாமல் சென்ற பயணிகளுக்கு அறிவுரை வழங்கி முக கவசம் மற்றும் கப சுர குடிநீரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் புனிதன், நூர் முகமது உள்ளிட்டோர் வழங்கினர். இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள் சுகு மாறன், ஜெயச்சந்திரன் பெரியகுளம் நகர் நலச்சங்கம் அன்புக்கரசன். இசுலாமிய நலக் கூட்டமைப்பு இணை செயலாளர் ஏ ஜே அமானுல்லா, நிஜாம்தீன், வெற்றி முஸ்தபா, உலமா சபை தலைவர் சையது இஸ்மாயில் மெளலானா, இசுலாமியஇளைஞர் ஜமாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.