வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் சங்கத்தின் கூட்டத்தில் நலதிட்ட  உதவிகள் வழங்கும் விழா 

05 October 2021

பெரம்பலூரில் வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் சங்கத்தின் கூட்டத்தில் நலதிட்ட  உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது:

பெரம்பலூர் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெட்டியார் கூட்ட அரங்கில் இன்று 05.10.2021 காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  பெரம்பலூர் மாவட்ட தலைவர். ச. அருண்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் மணிதேவன்  வரவேற்புரை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் P. A. மாதேஸ்வரன், பொதுச்செயலாளர் A. சிவக்குமார், மாநில பொருளாளர் V. ஸ்ரீ தரன். மற்றும் அச்சங்கத்தின் நிர்வாகிகள் பழனி குமார், பாலச்சந்தர், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று நலத்திட்ட விளக்கவுரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக சங்கத்தின் பொருளாளர் R. சரவணன் நன்றியுரை கூறினார். இதில் அச்சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.