திருவாரூரில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

05 October 2021


திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் டாஸ்மாக் பணியாளர்  துளசி தாஸ் என்பவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக்  கண்டித்து இன்று திருவாரூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத்  தலைவர் தமிழரசன்,  தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் அருள்மணி,  ஏ ஐ டி யு சி மாவட்டத்  தலைவர் லெனின்,  சிஐடியு மாவட்ட பொறுப்பாளர் அசோக்ராஜ்,  எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்டப்  பொறுப்பாளர் ரமேஷ்,  பாரதிய ஜனதா சங்க மாவட்டத்  தலைவர் கோபு,  விடுதலை சிறுத்தை தொழிற்சங்க பொறுப்பாளர் அச்சுத மேனன் ஆகிய மற்றும் தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்கள்  மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

*நிருபர் மீனா திருவாரூர்*