தமிழகத்திற்கான ஆக்சிஜன் அளவை அதிகரித்து மத்திய அரசு!

12 May 2021

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்வு என நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.


தமிழக முதல்வரின் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று கடந்த 8ம் தேதி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன் ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில் தற்போது மேலும் அதிகரிப்பட்டுள்ளது.

DRDO மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்தக் கோரி மாநில அரசு PM Cares அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது.

உடனடியாக விண்ணப்பிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்