மதுரை திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

19 June 2021



மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் செல்லக் கூடிய பிரதான சாலையில் உள்ள எம்ஆர்கே திருமண மண்டபத்தில்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பா தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுலான் கலந்து கொண்டு எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் உடைய பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்

தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கினார்

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தொடர்ந்து அதிமுகவை கலைப்பதற்காக நிர்வாகிகளுடன் பேசி வரும் சசிகலாவிற்கு எதிராக முக்கியமான 13 தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டது

1)சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களையும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக மாண்புமிகு அண்ணன் பன்னீர்செல்வம் அவர்களையும், மற்றும் கழக சட்டமன்ற கொறடா, துணைச்செயலாளர் துணை கொறடா,பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ஒருமனதாக தேர்வு செய்த கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது

  2)சாமானியர்களின் குரல் கோட்டை கொத்தளத்தில் ஒலிக்கவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா கண்ட கனவை நனவாக்கி தமிழ்நாட்டை சமதர்ம பூமியாக்கினார் புரட்சித்தலைவர்

3)புரட்சித்தலைவர் மறைவிற்குப்பின் கழகத்தைக் அழித்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்ட தீய சக்திகளின் சதிகளை தூள் தூளாக்கி மீண்டும் புரட்சித்தலைவர் புனித ஆட்சியை அமைத்தது மட்டுமல்லாது

4)தனது வாழ்வின் அற்புதமான 34 ஆண்டுகளில் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தை முதன்மை தேசமாக உருவாக்கி இந்த இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கினார் புரட்சி தலைவி அம்மா

5)புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புயல் வீசும் அனைத்தும் தகர்ந்து போய்விடும் ; இந்த அரசு நான்கு நாள் தப்பிக்காது என்று கூறியவர்கள் மத்தியில் நான்காண்டு காலம் நாடு போற்றும் நல்லாட்சி தந்து புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அளித்துச் சென்ற ஆட்சியை எதிரிகள் வியக்கும் வகையில் வெற்றிகரமாக செய்து காட்டினர் 

 6)நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2ஜி அலைவரிசையில் கொள்ளையடித்தை வாரி இறைத்து , மக்களை ஏமாற்றும் வகையில்வாக்குறுதிகளை அள்ளி இறைத்து ,மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக மற்றும் எதிர் அணி , சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு சதவிதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது .திமுக செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சியாக மக்கள் மனசாட்சியாக அஇஅதிமுக பணியாற்றும்என்பதை நாட்டு மக்களுக்கு நன்கு அறிவர் 

7)பிறர் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும் , நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்தி கொண்ட சிலர் ,அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தை கபளீகரம் செய்ய வஞ்சக வலையை நாள் தோறும் விரித்துக் கொண்டிருக்கின்றனர் 


8)சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக , அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்தது இதன் மூலம் தனக்கு அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள , கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசிவருகிறார் , அதை ஊர் அரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் ஆனால் ஒன்றை கோடி தொண்டர்கள் இதை நம்பவும் இல்லை ரசிக்கவும் இல்லை

 9)மகத்தான இரு தலைவரின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைக்குமே தவிர , ஒரு குடும்பத்தில் வசப்படுத்திக் கொள்ள தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம்  


10)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் , இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடந்த 23.5.2021 - ஆம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது . 

11)நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நம்மை பிரிக்க யாரும் சதிச் செயலை செய்தால் அவர்கள் வீழ்ந்து தான் போவார்கள் இந்த இயக்கம் ராணுவக் கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் 
தற்போது திருமதி சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி , கழகத்தின் வளர்ச்சிக்கும் , புகழுக்கும் . இழுக்கும் , பழியும் தேடியவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு. 


12)இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இடும் ஒவ்வொரு கட்டளைக்கும் 

 13)இரவு பகல் பாராது பணியாற்றி கழகம் மீண்டும் வெற்றிச் சரித்திரம் படைக்க சூளுரை ஏற்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது