தஞ்சை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி நடைபெறும்  சிறப்பு முகாம்...

10 September 2021




தஞ்சை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் மாவட்டம் முழுவதும் 1,324 முகாம்களில் நடைபெறுகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
தஞ்சை ரெயிலடியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பழைய பஸ் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
கோ வளங்கோவன்
கும்பகோணம்