1.5 கோடி வீணான தடுப்பூசிகள் அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

01 April 2021

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த ஒற்றை-ஷாட் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சுமார் 1.5 கோடி  டோஸ் அமெரிக்காவில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட சிறைய தவறால் வீணானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்டிமோரரில் உள்ள  அவசர பயோ சொல்யூஷன்ஸ் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் இது நடந்துள்ளது

மருந்தில் கலப்படவேண்டிய ஒரு முக்கிய மூலப்பொருளின் அளவில் சற்று மாற்றம் ஏற்பட்டதால், அதன் தரத்தை அது பூர்த்தி செய்யவில்லை என்றும், அந்த குறிப்பிட்ட அளவு மருந்துகளை மட்டும் நிரப்பப்படுவதற்கு முன்னரே தடை செய்து விட்டதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தடுப்பூசியின் அனைத்து உற்பத்தியையும் மேற்பார்வையிடவும், உறபத்தியைஆதரிக்கவும், பால்டிமோருக்கு அதிக நிபுணர்களை அனுப்புவதாக ஜான்சன் & ஜான்சன் கூறியுள்ளது.மேலும், இழப்பை ஈடுகட்ட ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 2.4 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், 2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 கோடிக்கும்  அதிகமான டோஸ்களை வழங்க ஜான்சன் & ஜான்சன் திட்டமிட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி அதன் ஒரே ஷாட் கொரோனா தடுப்பூசிக்காக பெரிதும் பாராட்டப்படுகிறது. மேலும் மாடர்னா மற்றும் பைசரின் தடுப்பூசிகளைப் போல், இதனை உறையவைக்கத் தேவையில்லை - இது விநியோகத்தை மிகவும் எளிதாக்குகிறது.