எவர் கிறீன் கரை தட்டியது எப்படி விசாரணையை தொடங்கிய எகிப்து

01 April 2021

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிரீன்’ கப்பல் எப்படி தரை தட்டியது என்பது குறித்து விசாரணைக்கு எகிப்து அரசு உத்தரவிட்டுள்ளது. கப்பல் தரைதட்டியது தொடர்பான தகவல்களை சூயஸ் கால்வாய் அமைப்பின் அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இதற்காக, ’எவர் கிரீன்’ கப்பலை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புழுதிப்புயல் காரணமாக கப்பல் தரைதட்டியதாக கூறப்படும் நிலையில், கப்பலின் மிதக்கும் திறன், கப்பல் குழுவினரின் நடவடிக்கைகள், கப்பலில் தொழில்நுட்பக்கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை நிறைவடைந்து ’எவர் கிரீன்’ கப்பல் சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்றதற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.