திருவாரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 15 நாட்களாக நெல்மூட்டைகளுடன் வெளியில் காத்திருக்கும் விவசாயிகளின் அவலநிலை போக்கபடுமா?

26 July 2021


திருவாரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 15 நாட்களாக வெளியில் நெலல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகளின் அவலநிலையை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னில பேரளம் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செயதிருந்தனர். பல இடங்களில் அறுவடை பணிகள் முடிவுற்று அறுவடை செய்த நெல்லை விற்பதற்கு பேரளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளூடன் கடந்த 15- நாட்களாக வெளியில் காத்திருக்கும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, இந்தாண்டு நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது அறுவடை பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக பேரளம்,கொல்லாபுரம், குருங்குளம்,திருமீச்சூர்,கொல்லுமாங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பேரளத்தில இயங்கி வந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில் வெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து கடந்த15-நாட்களுக்கும் மேலாக காத்திருக்கிறோம். மேலும் நெல்மணிகள் அடிக்கடி பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்து முளைக்கவும் தொடங்கியுள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாக்க தினந்தோறும் இரவு பகலாக பாதுகாத்து வருகிறோம். இது குறித்து பலமுறை மாவட்ட மண்டல மேலாளர் அவர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு உடனடியாக பேரளத்தில் செயல்பட்டு வந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.