ரெட் கிராஸ் சார்பில் வந்தவாசி துணை மின் நிலைய ஊழியர்கள் மற்றும் பயனாளிகளுக்கு முகக் கவசங்கள், கிருமிநாசினி வழங்குதல் நிகழ்வு

23 June 2021


 திருவண்ணாமலை மாவட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி வட்ட கிளை சார்பாக வந்தவாசி (வடக்கு பிரிவு) துணை மின் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு வந்தவாசி வடக்கு பிரிவு இளநிலை மின் பொறியாளர் பஞ்சமூர்த்தி தலைமை வகித்தார். ரெட் கிராஸ் உறுப்பினர் மொ. ஷாஜகான் வரவேற்றார். ரெட் கிராஸ் துணைத் தலைவர் இரா. சரவணன், மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் எஸ். ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் கொரோனா சூழலில் பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி பயனாளிகளுக்கு விளக்கினார். மேலும் மின் ஊழியர்கள் மற்றும் பயனாளிகளுக்கு *முகக் கவசங்கள், கிருமிநாசினி, நோய் எதிர்ப்புச் சக்தி ஆயுர்வேத பவுடர்* ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மின் ஊழியர்கள் ஆனந்தன், மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது நன்றி கூறினார்.