டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தாராபுரத்தில் விசிக ஆர்ப்பாட்டம்

21 January 2021

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தாராபுரத்தில் விசிக ஆர்ப்பாட்டம்

 டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா சிலை முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கிழக்கு மாவட்ட செயலாளர் நா, தமிழ்முத்து  தலைமை வகித்தார் இதில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வேளாண்மை தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள படியால் குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வலியுறுத்தியும் மாநில உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசை கண்டித்தும் தமிழக அரசு எம்எஸ்வி குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்ற வலியுறுத்தியும் கோச மிட்டனர் இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஆற்றலரசு நகரச் செயலாளர் செந்தில்குமார் ஒன்றிய செயலாளர் தனபால் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணைச்செயலாளர் முத்தமிழ்வேந்தன், தண்டபாணி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.