முத்தரையர் சமுதாயத்திற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி சார்பில் குறைந்தது பத்து தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும்

24 January 2021

திருச்சியில் சிங்க முத்தரையர் முன்னேற சங்க மாநில நிறுவன தலைவர் என். ஆர்.கே.ராஜீவ் காந்தி தலைமையில் எழுச்சி தமிழர் முன்னேற கழக தலைவர் வெள்ளைதுரை மாவட்ட கவுன்சிலர் மேலூர் டி. பாலா பாண்டிய நாடு முத்தரையர் சங்க தலைவர் இளங்கோவன் கொங்கு நாடு முத்தரையர் சங்க தலைவர் மணிமாறன் தெய்வசிகாமணி மற்றும் பாண்டியன் ஆகியோர் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பத்திரிகையாளரை சந்தித்து கூறுகையில் தி. மு. க. தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற    உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிடம் தங்களது முத்தரையர் சமுதாயத்திற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி சார்பில் குறைந்தது பத்து தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர்.  அப்போது தங்களது கோரிக்கையை தி.மு.க.தலைவரிடம் கூறி பரிந்துரை செய்வதாக கூறினார்    மேலும் தொடர்ந்து முத்தரையர் சமுதாயத்திற்க்கு  அரசியலில் ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது எனவே வருகின்ற தேர்தலில் முத்தரைய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் கட்சிக்கு முத்தரையர் சமுதாயம் சார்பாக வெற்றி பெற பாடுபடுவோம் என தெரிவித்தனர்.

கொற்றவை செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் ஹரிஹரன்