நேர்மையை பாராட்டி, பொன்னாடை அணிவித்து கௌரவித்த வள்ளியூர் உதவி ஆய்வாளர்

17 November 2021

*இரண்டு நபர்களின் நேர்மையை பாராட்டி, பொன்னாடை அணிவித்து கௌரவித்த வள்ளியூர் உதவி ஆய்வாளர்.*

வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியூர் பஜாரில், நிலா பேக்கரி அருகே ரோட்டில் கீழே கிடந்த ரூபாய் 26000/- பணப்பையை சௌந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த *சிவகுரு (35), பர்வீன் குமார்(46)* ஆகிய இருவரும் எடுத்து வள்ளியூர் காவல் நிலையத்தில் 16.11.2021 இன்று ஒப்படைத்தனர். இதனை *வள்ளியூர் உதவி ஆய்வாளர் திரு. அருண்ராஜா அவர்கள்* மேற்படி பணப்பையின் உரிமையாளர் சிலாத்திகுளத்தை சேர்ந்த சிவபாலன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (34) என்பவரை வரவழைத்து அவரிடம் உரிய முறையில் ஒப்படைத்தார். இதை கண்டெடுத்து நேர்மையான முறையில் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிவகுரு, பர்வீன்குமார் ஆகிய இருவரையும் உதவி ஆய்வாளர் அவர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்துள்ளார்.

செய்தியாளர்- ராஜன்வீரமணி