தமிழக காவல்துறை சார்பாக குமரியிலிருந்து குஜராத் பட்டேல் சிலைவரை இருச்சக்கர வாகன பேரணி

15 October 2021

*தமிழக காவல்துறை சார்பாக   குமரியிலிருந்து குஜராத் பட்டேல் சிலைவரை இருச்சக்கர வாகன பேரணி - தூத்துக்குடி எல்லையில் எஸ்.பி தலைமையில் வரவேற்பு*.

*இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக காவல்துறையின் சார்பாக இருச்சக்கர வாகன பேரணி  கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு குஜராத் மாநிலம் கவேடியாவிலுள்ள ‘ஒற்றுமை சிலையை” சென்றடையும் பேரணி இன்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வழியாக வந்தபோது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பேரணியை வரவேற்று உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தார்.* 

*இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நாட்டின் நான்கு திசைகளிலும் வடக்கே ஜம்மு காஷ்மீர், தெற்கே தமிழ்நாடு, மேற்கே குஜராத் மற்றும் கிழக்கே திரிபுரா ஆகிய மாநிலங்களின் காவல்துறையினர் சார்பாக அம்மாநிலங்களிலிருந்து இருசக்கர பேரணி ஆரம்பிக்கப்பட்டு குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்திலுள்ள கவேடியாவில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள "ஒற்றுமை சிலை” என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் திருவுருவ சிலையினை சென்றடைகிறது. தேசிய ஒருங்கிணைப்பு என்பதே இப்பேரணியிள் நோக்கம் ஆகும். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காவல்துறை சார்பாக இன்று 15.10.2021-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மகாத்மா காந்தி மண்டபத்திலிருந்து மணிமுத்தாறு 12வது சிறப்புக் காவல் படை துணைத்தளவாய் குமார் அவர்களது தலைமையில் 25 மோட்டார் சைக்கிள்களில் 25 தமிழ்நாடு காவல்துறையினரும், 16 உதவியாளர்களும் அடங்கிய குழு பேரணியாக புறப்பட்டு 2085 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டு கன்னியாகுமரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சித்ரதுர்கா, ஹப்ளி, கொல்ஹாபூர், பூனே, தானே, சூரத் மற்றும் நர்மதா மாவட்டங்கள் வழியே 10 நாட்கள் பயணித்து 24.10.2021 அன்று கவேடியாவிலுள்ள ‘ஒற்றுமை சிலை"யினை சென்றடைந்து 31.10.2021 அன்று நடைபெறும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.*

*மேற்படி இருசக்கர வாகன பேரணி இன்று (15.10.2021) தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வழியாக வந்த போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பேரணியை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றி வழியனுப்பி வைத்தார்.*

சி.என்.அண்ணாதுரை.